பெண் எனப்படுபவள்
வெடித்துச்சிதறும்
பிழம்பாக
வெண்ணிலவின்
குளிராக
சிரிப்பாக
சிணுங்களாக
பயமாக
பரிதவிப்பாக
வித வித
ஒலிச்சிதறல்கள்
பிரபஞ்சமெங்கும்
பெண்களால்
காற்றைப்போல
காற்றைவிடவும்
காற்று இல்லாமலும்
ஒவ்வொருவர்
சுவாசத்திலும்
Add comment நவம்பர் 20, 2009
uumm
Tags: கவிதை, உமா, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்.., இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா.
பெண் எனப்படுபவள்

இதய பாரம் இறக்கி
இடுப்புபாரம் ஏற்றும்
ஒய்யார ஊர்வலம்
காதல்களும்
கவலைகளும்
கலந்து
கரைந்து போகும்
வற்றாத நீர்வளம்
பட்டது பெரு வலி
என பதைத்த நெஞ்சம்
நடந்த நிகழ்வுகள்
சொல்கையில்
நகைச்சுவையாகிப்போகும்
நாணமில்லாமல்
கண்ணுக்குள் விழுந்த காதல்
கண்டெடுப்பாள் ஒருத்தி
கண்ணீரில் விழுந்த காதால்
கரையச்செய்வாள் ஒருத்தி
கொட்டியது
வெறுங்குடங்கள்
அவரவர்
குடங்கள்
தூக்கியபோது
கை மாறும்
ஆறுதல் குடங்கள்
2 comments நவம்பர் 19, 2009
uumm
Tags: கவிதை, உமா, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்.., இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா.
பெண் எனப்படுபவள்

கண்களில்
கவிழ்ந்திடும்
காந்தத்தில் ஓர் அழகு
கார்குழல்
ஒதுக்கி முடிந்ததில்
ஓர் அழகு
மெல்லிய சிரிப்பொளி
இதழ் கசிந்ததில்
ஓர் அழகு
கொள்ளென கை கொட்டி
சிரிப்பதை விட
ஏதழகு
ஊடலும் கூடலும்
ஓடலும் ஆடலும்
பாடலும் தேடலும்
ஒருங்கே
ஒளித்துவைத்து
உயர்வினி இல்லையென
உள்ளதெல்லாம் கொட்டிவைத்த
பெண் என்ற படைப்பே
பிரபஞ்சத்தின் பேரழகு
Add comment நவம்பர் 18, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., கவிதை, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பெண் எனப்படுபவள்
அவனுக்கு
நினைவு குறிப்பேடு
நிகழ்வுகளின் அலாரம்
அவள்..
எழுந்துருங்கள்
நேரமாகிவிட்டது முதல்
உறங்குங்கள்
நேரமாகிவிட்டது வரை
குறிப்பேடின்
அடிக்கோடிட்ட
அடுத்தடுத்த வரியாய்
“சொல்ல மாட்டியா..” என்பது
முதல் ஞாபகப்படுத்தல்
பதியாத போது
இரண்டவது முறையோ
மூண்றாவது முறையோ
சொல்ல நேர்ந்தால்
அடிக்கொடிட்ட
அந்த வார்த்தை
தவறாது சொல்லப்படுமென
அர்த்தம்
பல நாள் கவனிப்பில்
ஒரு நாள் கேட்டேன்
உனக்கு எதற்காவது
அலாரமாகி இருக்கிறாரா..என்று
அமைதியாய்
அடர்த்தியாய்
ஆழமாய் பார்த்து
வெகு இயல்பாய்
சொல்லிப்போனால்
வெளிக்கிளம்பும்
எல்லா தருணத்திலும்
“இடுப்புச்சேலையை
இழுத்துப்போர்த்து” என்பதை.
Add comment நவம்பர் 16, 2009
uumm
Tags: கவிதை, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்.., இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., இலக்கியம்.காதல்.கவிதைகள்.உமா
பெண் எனப்படுபவள்
எல்லா ஆணின்
வெற்றிக்குப்பின்னும்
பெண் தான் இருக்கிறாள்
அவன்
தோற்றவைகளின்
கோபங்களை
சுமந்துகொண்டு
3 comments நவம்பர் 13, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., இலக்கியம்.காதல்.கவிதைகள்.உமா, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பெண் எனப்படுபவள்…
பனிக்குடத்துடன்
படைத்ததற்க்காய்
பரவசமாய்
கைக்கூப்பினோம்
இலவசமாய்
கண்ணீர்
குடமிரண்டு
கலந்து படைத்த
நய வஞ்சகம்
அறியாமல்
2 comments நவம்பர் 12, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., உமா, கவிதை, காதல், காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பெண் எனப்படுபவள்…
வெளியூருக்கோ
வெளிக்கிளம்பலோ
தவறாமல்
வீட்டுப்பெண்களிடம்
விசாரிக்கும்
ஒரு குரல்
தொலைகாட்சிமுன் அமர்ந்தபடி
வெளித்திண்ணையில் நடந்தபடி
அடுப்பை அணைத்தாயா
பின்கட்டு கதவு சாத்தினாயா
பூட்டு சாவி எடுத்தாயா
தண்ணீர் பாட்டில் உள்ளதா
இன்னும் பல..பல..
கரைந்து கடந்த
நிமிடங்கள் தொலைந்தபின்
அவசரப்படுத்தும் அதே குரல்
அர்த்தமின்றி கேட்கும்
இன்னும் ஒரு கேள்வி
இவ்வளவு நேரம்
என்ன செய்தாய் என்று
4 comments நவம்பர் 5, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., உமா, கவிதை, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பெண் எனப்படுபவள்
உங்கள்
காதலை
சம்மதிக்கும் வரை
கடவுளாகத்தானே
எங்களை
கண்டீர்கள்
பின்பு ஏன்
அணிவித்தீர்கள்
வித..வித..முகமூடிகளை
தோழி என்றும்
காதலி என்றும்
மனைவி என்றும்
குடுமபத்தலைவி என்றும்..
2 comments அக்டோபர் 31, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., கவிதை, காதல், காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பெண் எனப்படுபவள்
வெறும்
வார்த்தைகள் என்றோ
வெற்றுப்புலம்பல்கள்
என்றோ
ஒதுக்கித்தள்ளிய நாள் முதல்..
வளர்கிறீர்கள்
நீங்களும்
மனிதத்திலிருந்து
வெளியே…
4 comments அக்டோபர் 24, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., கவிதைகள், காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
பெண் எனப்படுபவள்
சட்டென
ஒற்றைப்பார்வையில்
நிறுத்திவிட முடியும்
எல்லா
சாட்டை சுழற்ச்சிகளையும்
பயக்கயிறுகள்
அவ்வப்போது
அறுக்கப்பட்டபோதும்
குறைந்த பட்ச்ச
குணமிருப்பதால்
மருகிக்கொண்டிருக்கிறோம்
படைக்கப்பட்ட நாள் முதல்
வெறும் பந்தயக்குதிரைகளாய்
4 comments அக்டோபர் 24, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., இலக்கியம்.காதல்.கவிதைகள்.உமா, கவிதை, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
| Previous Posts |
