காதல்..சிறகினிலே
கோபங்கள் மறந்து
ஓடிவரத்தான்
நினைக்கிறேன்
விலக்க தெரியவில்லை
பிரிவில் விழுந்த
கண்ணீர்த்திரையை
Add comment ஜூலை 8, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே..
மழை நின்று
விட்டுப்போன
குளிர்சுகமாய்
அலைவந்து
அடையாளமிட்ட
ஈர மணலாய்
கதிர்மறைந்து
மிச்சம்விட்ட
இளம்சிவப்பாய்
உன் விரல்..
பிரிந்த
நிலையிலும்
மருதாணி
வண்ணம் மிஞ்சும்
என் கையெங்கும்
காதல் வெட்கத்தில்..
Add comment ஜூலை 7, 2009
uumm
காதல்..சிறகினிலே..
வேலை நிமித்தமாய்
வெளிநாட்டில் நீ
அணைத்துவிட்டுப்போன
உன் அலைபேசியை
தொடர்வுகொண்டு
ஆறுதல்பெறுகிறது
என் மனம்..
நான் என்று
அறிந்ததும்
தவிக்கும் அது
தகவல் தர
உனைத்தேடி
நீ இல்லையென
மொளனத்தில் சொல்லி
தேற்றுகிறது எனை
காதலின் வலி
கரைத்தலின்
முயற்ச்சியில்
நட்பாகிப்போனோம்..போ
நானும் ஒரு
அலைபேசியாய்.
Add comment ஜூலை 2, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே..
இறந்த காலம்
நிகழ்காலம்..
எதிர்காலம்
மூன்றுக்குமான
ஒற்றை
எடுத்துக்காட்டு
“நாம் காதலிக்கிறோம்”.
Add comment ஜூன் 28, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே…
எல்லோரும்
பார்த்திருக்க
யாரும்
பார்க்கவில்லையென
கண்சிமிட்டும்
விண்மினிகள்
காதலர்கள்…
Add comment ஜூன் 27, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே…
கனவுகள்
காத்திருக்கின்றன
இரவை
வரச்சொல்லி
நீயும்
காத்திருக்கிறாய்
உனை நிரப்ப..
என் கனவை
வரச்சொல்லி
வரவேண்டியவை
வந்தவுடன்
போய் விடுகிறது
என் தூக்கம்
Add comment ஜூன் 23, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே..
தாங்க முடியாத
ஒரு மரணம்
தவித்துப்பிரிந்த
ஒரு பிரிவு
ஒதுக்கிச்செல்லும்
ஒரு ஸ்நேகம்
உடல் நிலை பாதித்த
பெரும் வலி
பசியில் துவண்ட
சில மணித்துளி
எது பாதித்த
நிலையிலும்
கை கால் மடக்கி
உன் மடியில் அடங்கி
சிறு பிள்ளையாய்
உறங்குகையில்
எவ்வுறவையும் விட
உயர்ந்ததாகிவிடுகிறது
உனக்கும் எனக்குமான
காதல்…
Add comment ஜூன் 22, 2009
uumm
Tags: காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே..
விழுந்த பூக்குளத்தில்
ஆழ நீந்துகிறேன்
வழியில் பார்க்கிறேன்
என்னைப்போல் ஒருத்திகளை
மயங்கிய தெளிவிலும்
தெளிந்த மயக்கத்திலும்
அவரவர் நிலைப்படி
வலிகள் பொதுவாய்
வைத்திருந்தாலும்
வெட்கமாய் வழிகிறது
அவர் விழிகளில் கதல்
கடைசியில் கிடப்பவள்
யாரெனத்தேடி
அடைகிறேன் ஆரம்பத்தை
கண்சிமிட்டிச்சிரிக்கிறாள்
காரணகர்த்தியாய்
ஏவாள் அங்கே..
Add comment ஜூன் 19, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே..
உருவமற்றுத்திரிகிறேன்
காதல் பேழைக்குள்
அனுவாய்..அகிலமாய்
அடிக்கடி மாறும்
என் உருவம்
எரியலாம் குளிரலாம்
கால நிலை அறிவிப்பின்றி
வெட்கமும் வீரமும்
மோதி உடையும் புள்ளியில்
கணக்காய் கணக்கிறேன்
காதலின் எடை தாளாமல்
இழுத்திச்சாத்திய
கதவிற்க்குள்
உலகைப்படைக்கிறேன்
கடவுளாய்
காதல் கொடையில்
Add comment ஜூன் 18, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
காதல்..சிறகினிலே…
எதிரும் புதிருமாய்
எப்போதும் இருவரும்
சண்டைக்கோழிகளாய்
தலைசிலிர்ப்பி
திரிகிறோம்
எனக்குபிடித்த எதுவும்
உனக்கு பிடிப்பதில்லை
உனக்கு பிடித்த எதிலும்
எனக்கு உடன்பாடில்லை
துருவங்கள் இரண்டாய்
தொடர்கிறோம் காதலை
பொருத்தமில்லை இருவருக்கும்
போய் விடு என்கிறேன்
செல்லச்சிரிப்புடன்
மெல்லச்சொல்கிறாய்
“அடிச்சிறுக்கி..
உண்மையில் நமக்குத்தான்
பகுத்தறிவுத்திருமணம்”
என்று.
Add comment ஜூன் 16, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
| Previous Posts |