வலிமைபயம்
மார்ச் 13, 2008
uumm
என் கவிதை வரிகள் மீது..
தீக்குளம்பைத் தெளித்தன…
உன் நாக்குகள்…
சுட்டு சுருங்கிய எழுத்துக்களும்..
அதன் முகங்களும்..
படையில் வந்து மீண்டும்..
அணிவகுத்து நிற்கும்..
உனை எதிர்தேயிராத
பார்வைகூட புருவம் சுருக்கி..
உன் முகத்தைமேய..
தடுமாற்றத்தை தவிர்ப்பாய்…
ஒவ்வொரு முறையும்…
எனை..நீ…
புதைத்துப்போன இடத்தில்..
புல்..பூண்டு..முளைக்காமல்..
நானே..முளைத்தும்..
நம்பவில்லை..என்
நேசத்தை….
உன்..படையெடுப்பின்
களிப்பில்…
வார்த்தைகள்..இறந்து போக…
அதன் கருக்கள்
ஈன்றெடுக்கும்..
புதுப்புது வார்த்தைகளை..
என்றாலும்..
என் கவலையெல்லாம்..
உன் வலிமையை கண்டு அல்ல..
உன் பயத்தைக் கண்டுதான்….
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed