Archive for மார்ச் 22nd, 2008
உயிர்பந்தல்
மனப்பந்தலில்
மல்லிகையின் வாசம்…
குணப்பந்தலில்..நீ
கொன்று விட்ட கோபம்..
விழிப்பந்தலில்..
வழியெங்கும் விழாக்கள்…
என் உயிர்ப் பந்தலில்..
நீ…
உள்ளடங்கி ..இருப்பதனால்…..
Add comment மார்ச் 22, 2008
ஈரநினைவு
மழை வரும் தினமெல்லாம்..
மனதில்..உன் நினைவு…
பள்ளியில் மரத்தடியில்
துளி த்துளியாய் நனைந்தது….
பேருந்து நிறுத்தத்தில்
பாதியாய் நனைந்தது…
வேறு வழியின்றி..
வெறுமென நனைந்தது…
ஆசை ஆசையாய்
அவ்வப்போது..நனைந்தது…
அனைத்தும்..கடந்து…
ஆழ்மனதில்..ஈரமாய்…
நீயும்…நானும்..
நேர்கோட்டில்..நனைந்தது…..
Add comment மார்ச் 22, 2008
விழிமழை
என் வானம்
திரண்டுகிடக்கிறது…..
உன் நினைவுகளைப்போல்…
எப்போது வேண்டுமானாலும்
பெய்யலாம்…
விழிகளில் மழையாய்……
Add comment மார்ச் 22, 2008