Archive for மார்ச் 30th, 2008
மீண்டும் தொடர…
உன்னை..திட்டித்தீர்த்த..
வார்த்தைகள்..
வலுவிழந்து..ஒழிந்து..
சினேகித்து க்கொண்டிருக்கும்…
உன்..
புத்தக..மயிலிறகுடன்…
நீ..மறந்து விட்டிச்சென்ற..
கலர் பென்சிலும்..
கதை புத்தகமும்…
இருக்கும் இடம் சொல்லாமல்..
பயந்து தவிக்கும்..
என் கோபத்திற்கும்..
உன் வருகைக்குமாய்……
அழிக்காமல்..நீ..விட்டுப்போன..
அசிங்கமான…என் உருவம்..
கோபத்தையும்..சிரிப்பையும்…
விநோதமாக இணைக்கிறது…
கரும்பலகையில்…
தொங்கியபடி….
உனை..விரட்டும் பொழுது..
என் பால்யம் மறந்து…
என் தயாகவே..ஆகிறேன்…
நானும்…
உன்..கொலுசொலியும்..
சிரிப்பொலியும்….
பதிந்திருக்கும்…தரைபோல்..
சினுங்களும்…குறும்புகளும்..
ஒழிந்திருக்கும்…சுவர்போல்..
நானும்..காத்திருக்கிறேன்…
விடுமுறையில்..
பாட்டிவீடு..
சென்ற..மகளே…
உனக்காக….
இவையெல்லாம்…
மீண்டும்..தொடர…
1 comment மார்ச் 30, 2008
மூக்குத்தி..
மூக்கை க்குத்திக்கொண்டு..
அமர்ந்தாய்..என் முகத்தில்..
அழகுக்காய்..
என அக்கா..சொல்ல…
கோபம் குறையும்..என
அம்மா…இடிக்க…
திருமணத்திற்கு..அவசியமாம்..
தந்தை..வற்புறுத்த…
எவர்பொருட்டு..உண்மையோ…
என் பொருட்டு வந்தாய்…
வலிக்க…வலிக்க..
வந்த நாட்களில்..
வெறுப்பாய்..உனை
முரைத்தேன்..
போகப்போக…ஒன்றுமில்லை..
உனக்கும்..எனக்கும்..
உறவாய்…
வரம் தரும் அளவிற்கு..
வளர்ந்துவிட்டேன்..இப்போது..
என்ன வேண்டும்..உனக்கு?..
முகத்திலிருந்து..விடுதலையா?…
மூக்கிற்கான…பட்டாவா?…
Add comment மார்ச் 30, 2008
செல்லப்பெயர்
உன்னை..வெறுத்து…
ஒதுக்கி…
மறந்த பிறகும்…
உன் உருவம்..
கரைத்து…ஆழ்கடல்..
கலந்த பிறகும்…
உன் செயல்கள்…
வலித்து…
கசந்த பிறகும்
என்றாவது…எவர்..
வாயிலிருந்தாவது
வரும்போதெல்லாம்..
எனை எரித்துவிட்டு ச்செல்கிறது..
உனக்கு நானிட்ட…
செல்லப்பெயர்……
3 comments மார்ச் 30, 2008
என் பேனா
என் உயிரைக் கொண்டு
உலவும் உருவம்…
என் நினைவைக் கொண்டு..
பறக்கும்…
அதன் இதயம்…
என் உயிர் மெய்யெல்லாம்
மையாய்க் கொண்டு…
உழுது நடக்கும்..
ஒரு கால் எருது…
நான் எண்ணி முடித்த…
எண்ணம் எழுதும்..
என்னைபோல்..
இன்னொரு பிரதி….
நான் இருக்கும் வரைக்கும்
என் எண்ணம் அறிவாள்..
இவள் மட்டுமே..நான்
இறந்த பின்னும்..எண்ணிய..
எண்ணம்..அறிவாள்…
காசெல்லாம் கேட்காத..
காந்தீயவாதி…
கைப்பைக்குள் வசிக்கும்..
என் காரியதரிசி….
Add comment மார்ச் 30, 2008