Archive for மே 12th, 2008
நாமாகும் வரை..
நீ..நீ யாகத்தான்
இருக்கிறாய்…
நான் தான்..
நானாக இல்லை…
நீ..நீயாக. இருக்கும் வரை..
நான்..நானாக..
இருக்கமுடிவதில்லை…
என்று..நீ..
நானாகிறேனோ..
அன்று..”நான்”..
என்ற ..கர்வம் கொள்வேன்…
என்று…நான்..
நீயாகி…ப்போவேனோ..
அன்று..”நான்”..
என்ற….அடையாளம்..இழப்பேன்…
நான்..நீயாக..
மனது..வரவில்லை..
நீ.நீயாகவே..
இருப்பது..மனதுக்கு..
பிடிக்கவில்லை….
சரி..சரி..
நீ..நீயாகவே..
இருந்து தொலை…
நானும்..நானாகவே..
இருக்க..ப்பார்க்கிறேன்…
நீயும்…நானும்..
நாமாகும்…
மன..நிலை..வரை…
2 comments மே 12, 2008