Archive for மே 22nd, 2008
ச்சீ..ச்சீ..
என்..வீட்டை கடக்கும்..
உன் கால்களில்..ஒட்டிச்..
சிதறிய மண்துகளும்…
என்..விரல்விட்டு..
சிந்திய கோலப்பொடியும்..
ரகசியம்..பேசுகிறது..
நம் காதல் நாடகம்பற்றி…
என் வீட்டு வாசலில்…
நீ..கானாத பொழுது..
உனை தொட்டுத்திரும்பிய…
என் பார்வை..எனை..
முறைத்த படியே..
உட்செல்கிறது..
என்..விழிபடலத்திற்க்குள்..
நீ..வெளியேற்றிய..
மூச்சுக்காற்றும்..
நான்..வெளியேற்றிய..
மூச்சுக்காற்றும்..
எதிர்பாராமல்..சந்தித்தால்..
நித்திய..சந்திப்பின்..
நிச்சயமின்றி..
இணைந்து விடும்..
இன்னொரு..பெருமூச்சு..
“பிடித்திருக்கிறது”என்று..
பிறக்க..காத்திருந்த..வார்த்தை..
பொருமை..இல்லாமல்..
எனை..”எருமை”..
என..திட்டுகிறது..
கனவுகளிலாவது..
கை..கூடிவிடாதா?..
என காத்திருந்த கரங்கள்…
காத்துகிடக்கிறது…
மூளையின்..கட்டளைக்கு..
இத்தனை..புரிந்தும்..
நாணம் எனும்..கோணிமூடி…
நடிக்கிறது..பொண்மை..
காதலா!
ச்சீ..ச்சீ..என்று…
4 comments மே 22, 2008