Archive for ஜூலை 9th, 2008
தொலைந்த..கவிதை..
என் ..
கவிதைபுத்தகம்..
தொலைந்த..போதே..
தெரியவில்லை..
என்…
கவிதையும்..
தொலையுமென்று…
விபரங்கள்..ஏதும்..
சொல்லாமல்..எனை..
விட்டெறிந்த..போதும்..
வலிக்கவில்லை..
உனக்கென்ன..
பிரச்சனையோ…என்று….
நீ..எரிந்த..
நெருப்பு வளையத்திற்க்குள்..
சுட்டெரிகிறது…
தோல்..கூடு….
துளைத்த..துளைகளில்..
கசிகிறது..
நேசக்கழிவுகள்…
கதறல்களாய்..
எரிக்க..முடியாமல்..
எஞ்சி..நிற்கிறது..
உன் மீது..கொண்ட..
அன்புமட்டும்..
தீ……..க்காயங்களுடன்..
திணரும்..உயிர்..
கேட்கிறது..
“என்ன..தவறு செய்தேன்..
பதில்..உண்டெனில்..
தள்ளி..வைத்திருக்கலாம்..
தண்டனையை..
ஊசலாடி…நான்..
உள்ளடங்கும் வரை..”
என் ..
கவிதைபுத்தகம்..
தொலைந்த..போதே..
தெரியவில்லை..
என்…
கவிதையும்..
தொலையுமென்று…
Add comment ஜூலை 9, 2008