Posts filed under 'கவிதை'
பெண் எனப்படுபவள்..
உற்றவர் தோழியர்
பேசித்தீர்த்த ஒரு கணத்தில்
பிள்ளைகள் பள்ளி செல்ல
படவிக்கிடக்கும்
மதியப்பொழுதில்
புணர்தலில் களைத்தவன்
உறங்கிப்போன
பின்னிரவில்
நிகழ்வுகளின்
எச்சமென
வாழ்தலின்
மிச்சமென
தவிர்த்தலின்றி
தனிமைப்பொழுதுகள்
பெண்கள்
வாழ்வில்
1 comment December 9, 2009
பெண் எனப்படுபவள்..

மரணப்படுக்கையில்
குடும்பத்தலைவி
இறந்துகொண்டிருக்கிறது
வீடு..
2 comments December 9, 2009
பெண் எனப்படுபவள்

பேரிரைச்சல்
கொண்ட உலகையும்
பெருமெளனம்
கொண்ட வாழ்வையும்
ஒற்றைசங்கீதமாய்
இனைக்கிறது
எவ்வடிவிலாவது வரும்
ஓர் பெண் உறவு
2 comments December 3, 2009
பெண் எனப்படுபவள்

மாறித்தான் போகும்
ஒவ்வொருவர்
கை மணமும்
கலந்துள்ள
வியர்வையின் வாசம்
வித்தியாசப்படுவதால்
1 comment நவம்பர் 28, 2009
பெண் எனப்படுபவள்
காதலை கவிதையாக
காதலை சுவாசமாக
காதலை காமமாக
காதலை குற்றமாக
காதலை வெறும் காரணமாக
காதலை இயல்பான காதலாக
நிர்ணயிக்கிறது
காதலியாகும்
பெண்னின் குணம்
2 comments நவம்பர் 27, 2009
பெண் எனப்படுபவள்

பெண்மையின்
சிவந்த வெட்கம்
மலர்ந்த புன்னகை
நிமிர்ந்த அறிவு
அடர்ந்த அன்பு…
உலகை
புதிப்பிப்பதற்கான
இன்னொரு வாய்ப்பு
Add comment நவம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்

ஆழ்கடல்
மனமென்றும்
அறியமுடியாதென்றும்
காரணங்கள்
சொல்லித்தவிர்க்கும்
கதைகள் பல இங்கே
விருப்பங்களும்
விளக்கங்களும்
வெளிப்படையாய்
விரிந்துகிடக்கும்
எப்போதும்
பெண்களின்
கண்களில்
Add comment நவம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்
தனித்தனி
பூக்களாய்
படைத்து படைத்து
சலித்துப்போய்தான்
மொத்தமாய்
படைத்துவிட்டான்
கொத்து கொத்தாய்
பெண்களென்று..
1 comment நவம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்
வெடித்துச்சிதறும்
பிழம்பாக
வெண்ணிலவின்
குளிராக
சிரிப்பாக
சிணுங்களாக
பயமாக
பரிதவிப்பாக
வித வித
ஒலிச்சிதறல்கள்
பிரபஞ்சமெங்கும்
பெண்களால்
காற்றைப்போல
காற்றைவிடவும்
காற்று இல்லாமலும்
ஒவ்வொருவர்
சுவாசத்திலும்
2 comments நவம்பர் 20, 2009
| Previous Posts |




