Posts filed under: ‘Uncategorized‘




புள்ளிகளாய
உனை வைத்து
கோலங்கள்
வரைகிறேன்
கவிதைகளாய்

காதலினால்

Add a comment December 29, 2011

வெட்கத்தின்..
தாழ்வாரமெங்கும்…
வெளிர் சிவப்பு..
வண்ணங்கள்

நாணக்குடை..
மீறி..நனைக்கும்..
எனை..
நீ..பொழிந்த..
காதல்..மழை…

சூடியதை…விட..
உதிர்ந்தவை..அதிகம்..
கொலுசுக்கொண்டாட்டத்தில்..
தரை விரிப்பாய்..
மல்லிகைகள்..

இயல்பாகத்தான்
இருக்க நினைக்கிறேன்

இத்தனையும்
நடந்துவிடுகிறத
உனைக்கண்ட
கண்கள் பின்..
கண்ணாடி பார்க்கும்
பிரதிபலிப்பில்
………………………………………..

அறுந்த..மணியாய்
உருளும்..
விழித்துளி
நொறுங்ச்சொல்கிறது
நம்
நேசத்தை..

மலர்ந்த..பூக்கள்..
மகரந்தம்.தூவி.
மகிழ்த்தும்…காதல்..
தேசத்தை

தொலைத்த..சிரிப்பை…
மறந்த..மகிழ்வை..
தேடிக்கொடுத்தது..
உனது..குரல்..

உயிரே..
உயிரே…
உருவம்..ஒலியாய்..
என்..
உடலைச்சேர்ந்தது..
உனது..நிழல்..

வலிகள் மறந்து
விழிகள் திறந்து
உலகை ரசிக்கும்
எனது குணம்

இனிது…
இனிது..
காதல்..இனிது..
இனி..
இறப்பைக்கேட்க்கும்..
எனது..மனம்…

Add a comment நவம்பர் 23, 2011

பூவாளி

காதல் சொன்ன

கவிதைகள் ஆயிரம்

காதல் கொண்ட

மனிதர்கள் ஆயிரம்

நானும் கொண்டேன் காதலை

நாளும் கொள்வேன் காதலை

பருவம் வாய்த்த காலம் முதல்

பழுத்த கிழவியாய் சாயும் வரை

நிலையாய் நிறைவாய் மனதில்

நிம்மதியாய் நேர்மையாய் காதல்

குறுக்கு எண்ணம் எதுவுமில்லை

குற்றம் சொல்லும் பழக்கமில்லை

நினைத்த வார்த்தை நெஞ்சில்

தொடங்கி வாய்வழித்தள்ளும்

பெருத்த சோகமில்லை

செப்படி வித்தையில்லை

கிடைத்த அனுபவத்தால்

குழவியில் கிழவியாக..

பருத்த உலகின் மடியில்

பானைசோற்றாய் சிறுத்தும்

எடுத்த அவதாரம் போல

என்னை விரித்தது காதல்

பசியை புசித்து இருந்தோம்

பழமை பேசித்திறிந்தோம்

கசிந்த கண்கள் தவிர

கனவுக்கண்களோடும் அலைந்தோம்

நடக்கும் சண்டை முடிவில்

யாருக்கு யார் உயிர் என்று

வெறுத்து தவித்தும் இறுந்தோம்

வயது கழிந்த நிலையில்

வாலிபம் தெளிந்த பொழுதில்

அதட்டும் விழிகள் அனைக்க

நடித்த பெண்மை இறுக்க

பிடித்த விரலுடன் நடக்கும்

பிள்ளையுடன் பிள்ளையாய்

காதல்

எனக்குள் பிறந்து

எனக்குள் வளர்ந்து

எனக்குள் வாழும்

என்னை ஆளும்

காதலே உனை

காலமெல்லாம் பாடுவேன்

காலமுள்ளவரை பாடுவேன்

Add a comment நவம்பர் 22, 2011

பூவாளி

நிகழ்வது போலவும் நடப்பது போலவும் முடிவது போலவும் தானே கற்பனை செய்து கொண்டு…

Add a comment நவம்பர் 22, 2011

உமா

வணக்கம்

2 பின்னூட்டங்கள் ஜூன் 22, 2011

பூவாளி

அடர்காட்டில்
அகப்பட்டேன்
எரியும்
தீக்குச்சியாய்

நானும்
எரியக்கூடும்
என்னாலும்
எரியக்கூடும்
சாத்தியங்கள்
தவிர்க்க
மூழ்கத்தேடினேன்
நீர்க்குமிழ்களையேனும்

யாரால் பெய்யக்கூடுமோ
அனைப்பதற்கான
அன்புமழை
சாம்பலாய்
நனைப்பதற்க்குமுன்

2 பின்னூட்டங்கள் செப்டம்பர் 15, 2010

பெண் எனப்படுபவள்

எல்லா ஆணின்
வெற்றிக்குப்பின்னும்
பெண் தான் இருக்கிறாள்

அவன்
தோற்றவைகளின்
கோபங்களை
சுமந்துகொண்டு

3 பின்னூட்டங்கள் நவம்பர் 13, 2009

காதல் சிறகினிலே..

எழுதி வைத்த
தற்குறிப்பால்
பாதி அறியமுடியும்

கைகளுக்குள் கை பதித்து
கொஞ்சம் அறிய முடியும்

சில காலம் பேசி ப்பழக
இன்னு கூட முடியும்

இது எதுவும் நடக்காமல்
இரண்டு நிமிட..
உற்றுப்பார்வையில்

உனை முழுதும்
அறிய முடிந்தது
உள்ளே…காதல்
கண்திறந்ததால்…

Add a comment மே 2, 2009

காதல்.சிறகினிலே…

வேறு ரத்த வகுப்பு
என்ற போதும் நிற்க்கவில்லை

மாற்று பாலியலாய்
மாறி விட்ட பதற்றமில்லை

உடல் வேறாய் போனதற்க்கும்
ஒரு துளியும் எதிற்ப்புமில்லை

சிறு ரத்தமும் சிந்தாமல்
சிரித்தபடியே நடக்கிறதிங்கே

இதயமாற்று சிகிசை

2 பின்னூட்டங்கள் April 30, 2009

காதல்..சிறகினிலே..

தேநீர் பருகலுக்காய்
கிடைத்த நிமிடத்தில்
தவறாமல் உன் நினைவுகள்
களைப்பெடுத்துச்செல்கின்றன..

பேசுவதற்க்கு நேரமற்று
முயற்ச்சியிலேயே முடிந்துவிடுகிறது
நாள் பொழுது..

பேருந்து பயணத்திலும்..
படியிறங்கி நடக்கையிலும்
நீயே கடந்து போனாலும்
கவனிக்கதவறும் உறுதியில்
தனக்குத்தானே பேசிச்சிரித்து
கனவிலேயே நடக்கிறேன்..

சாப்பிட தட்டெடுக்கையில்
‘சாப்பிட்டாயா”
அனிச்சையாய்  குரலெலுப்புகிறேன்
உள்ளுக்குள் எட்டிப்பார்த்து
உள்ளத்திற்க்குள்…

நடந்து முடிந்த
நாட்க்குறிப்பாய்
நான் எழுத எதுவுமின்றி
மூடிவைக்கிறேன் டைரியை
சோகத்திற்கொன்றாய்..
அதை ருசித்த
சுகத்திற்கொன்றாய்..
இரு துளி
கண்ணீரைப்பதித்து..

சாய்ந்துரங்கும்
எனைஎழுப்பி
நடக்கவிருக்கும்
நாளை சண்டையைச்சொல்லி
இதழ்கோடியில்
ஒரு சிரிப்பை தந்து
போர்த்திப்படர்கிறது
என்மேல்..
உரக்கமோ..உன் நினைவுகளோ..

Add a comment April 26, 2009

பக்கங்கள்

வகைகள்

இணைப்புகள்

மேல்

நாள்காட்டி

மே 2012
தி செ பு வி வெ ஞா
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category

 
Follow

Get every new post delivered to your Inbox.