உமாவும் கவிதையும்:–
மே 27, 2016
uumm
விதிகளற்றது நம் சாலை
இருமருங்கிலும்
சோலைகளோ
மணல் மேடுகளோ
நினைக்கும் எண்ணத்தில்
நிறையும் வண்ணத்தில்
நடக்கும் விபத்துகள்
வலிக்கும் வலியை வழிக்கும்
நொடியில் மறக்கும்
மீண்டும் பயணிக்கும்
தொடங்கிய நாளுக்கொரு
முத்த சாட்சியை
பக்கத்தில் வைத்து
முடியும் நாள் தெரியாமல்
மூவரும் பயணிக்கிறோம்
நீ
நான்
காதல்
Entry Filed under: Uncategorized
பின்னூட்டமொன்றை இடுக