Posts tagged ‘காதல் ‘
நிபந்தனைகளற்றது
நட்பு
நிபந்தனைகளுக்குட்பட்டது
காதல்
அன்பில் எல்லைகள்
வகுத்ததால்
Add a comment ஏப்ரல் 19, 2014
உமாவும் கவிதையும்:–
காதலை கவிதையாக
சொல்லமுடிகிறது
எல்லோரிடமும்
என் கவிதையை காதலாக
சொல்லமுடிகிறது
உன்னிடத்தில்
மட்டும்
Add a comment ஏப்ரல் 4, 2014
உமாவும் கவிதையும்:–
என் கணத்த
மெளனத்தை
என்னவென்று
பொருள்கொள்வாய் நீ
வலியின்
ஆழமென்றா
ரணத்தின்
நீளமென்றா
விரக்தியின்
உச்சமென்றா
நிராசைகள் அவை
வழக்கம்போல் உணர்வாய்
என் திமிரின்
பெரு உருவம் என்று
Add a comment மார்ச் 14, 2014
உமாவும் கவிதையும்:–
நிலைக்கன்ணாடி முன்
பிரதிபளிக்கிறது
என் பிம்பம்
கோப அகங்கார கொம்புகள்
கூர்மையுடன் வளைந்து
பொய்யும் பொறாமையும்
உதடு தடுக்கா பற்களாய்
தலையில் ஒரு புகழ்ச்சி ஏற
குழைகின்றன கொம்புகள்
வாழ்த்து என் வீழ்ந்தபோது
வலுவிழந்தது
கோர நீளம்
கருமை பூசி
உறுத்துப்பார்க்கும்
பொறாமை மட்டும்
பொசுங்கி அழுகிறது
நான் ஒன்றும் செய்யவில்லை
இத்தனைக்கும் காரணம்
இளமையில் மறுத்த
இயல்பான ஆசைகள் என்று
Add a comment மார்ச் 12, 2014
உமாவும் கவிதையும்:–
புதிய வீதிகளாம்
வீடுகளாம்
சாலைகளாம்
திரும்ப பார்க்கிறது
பழைய நிலைக்கு
அறுத்த மனிதர்களை
நட்ட பார்க்கிறது
சிங்கள மரங்களால்
நடட்டும்
நடக்கட்டும்
அச்சம் கொள்ளுங்கள்
அரித்து போகலாம்
நீங்கள் புதைத்த
ஆத்ம வீரியத்தால்
Photo
Photo
Add a comment ஜனவரி 24, 2014
உமாவும் கவிதையும்:–
நாட்பில் நான்
விருப்பமுற்றவள்
என்பதையும்
காதல் எனில்
விலகி நிறபவள்
என்பதையும்
அறியாமல்
சொல்லிச்செல்கிறாய்
நட்பை சொல்லவந்த இடத்தில்
காதலை
உன் அறியாமைக்கு
அகப்படாமல்
நழுவுகிறது
நட்பும்
Photo:
Add a comment ஜனவரி 24, 2014
உமாவும் கவிதையும்:–
பெரு மழையில் நனைந்த படி
பேருந்துக்காக காத்திருக்கிறேன்
எனை நோக்கி வருவதும் போவதுமாக
தடுமாறும் உன் கால்களை
கவனிக்கத்தவறவில்லை அப்போதும்
என் அருகில் பேசுபவனை
சந்தேகத்தில் பார்க்கிறாய்
நன்பனா காதலனா என்று
பதறிப்பதறி கழியும் நிமிடத்துடன்
சரியத்துவங்கியது என் எதிர்பார்ப்பும்
பேருந்துப்படியேறி அமர்ந்தவுடன்
முகம் பார்க்கிறேன்
அவசரமாய் கறைத்துக்கொண்டிருந்தாய்
உன் ஆசைகளை மழையில்
பெருமூச்சோடு வேண்டுகிறேன்
நான் இறங்கும் வரை
மழை நிற்க்ககூடாதென்று
Add a comment நவம்பர் 15, 2013
உமாவும் கவிதையும்:–
தனித்தீவில் தான்
விட்டுச்சென்றிருக்கிறாய் என்னை
கடலென சூழ்ந்த மனிதர்களால்
நுரைகூட மிஞ்சவில்லை
என் வாழ்வில்
பெருமழையும் சூறாவளியும்
புகுந்து போனபோதும்
சிதறவில்லை
உன் நினைவுக்குடிசை
படகோ தோணியோ
பதிலுக்கு அனுப்புவாய் என்ற
முழுநம்பிக்கை அற்றபோதும்
அசரவில்லை
தீவே நாந்தான் என்ற
அர்த்தம் புரிந்து
கள்ளத்தோணியிலாவது
காலம் கடந்து வந்து பார்
விழிநீர்ப்பெருக்கல்
கடல் நீர் உயர்ந்து
காணாமல் போயிருக்கும்
இக்காதல் நிலம்
கடக்கும்
காக்கையும் குருவியும்
கதையாய் சொல்லும் எனை
காதல் வெல்லுமுனை எனில்
உன் உள்ளம் மட்டும்
சொல்லக்கூடும் அவள்
வெறும் கதை அல்ல என்று
Add a comment ஜூலை 4, 2013
உமாவும் கவிதையும்:
நீ அருகில் இருக்கும் வேளையில்
விலகிப்போகிறேன்
நீ அழைத்துகிடக்கும் வேளையில்
தனித்துப்பிரிகிறேன்
நீ அலைந்து திரியும் வேளையில்
உனை வேண்டி தொடர்கிறேன்
நீ முடித்து வந்த வேளையில்
மறுத்து மறைகிறேன்
இனிக்க பேச வந்த வேளை
கோபம் கொள்கிறேன்
கோபம் கொண்டு கத்தும் வேளை
கொஞ்சிப்பார்க்கிறேன்
ஒத்த பார்வை தந்த காதல்
சித்தம் சேர்த்து கொள்ளவில்லை
ஒத்த எண்ணம் கொண்டவரெல்லாம்
ஒத்துப்போன விதியுமில்லை
காதல் வேண்டும் இதயம் நோக்கி
காதல் சென்று சேர்வதில்லை
காதலே தெரியா காதல் நமக்கு
கொஞ்சம் குறைய வாய்ப்பேயில்லை
Add a comment ஜூன் 21, 2013
உமாவும் கவிதையும்:–
குளிர்கின்ற நெருப்பொன்று
கொதிக்கின்ற நிலவொன்று
இனிக்கின்ற விஷமொன்று
சுடுகின்ற மலரொன்று
சுவையற்ற கனியொன்று
கரையற்ற அலையொன்று
அந்தரத்து கடலொன்று
ஆகாய மரமொன்று
எதுவொன்று இருக்குமெனில்
நானும் இருப்பேன்
உனை மறந்து
Add a comment ஜூன் 10, 2013